ப்1ரவ்ருத்1தி1ம் ச1 நிவ்ருத்1தி1ம் ந ஜனா ந விது3ராஸுரா: |
ந ஶௌச1ம் நாபி1 சா1சா1ரோ ந ஸத்1யம் தே1ஷு வித்3யதே1 ||7||
ப்ரவ்ருத்திம்--—சரியான செயல்கள்; ச---—மற்றும்; நிவ்ருத்திம்---—முறையற்ற செயல்கள்; ச--—மற்றும்; ஜனாஹா--—நபர்கள்; ந--—இல்லை; விதுஹு--—புரிந்துகொள்வது; ஆஸுராஹா--—அஸுர குணம் கொண்டவர்கள்; ந--—இல்லை; ஶௌசம்—தூய்மை; ந--—இல்லை; அபி---—கூட; ச--—மற்றும்; ஆசாரஹ--—நடத்தை; ந--—இல்லை; ஸத்யம்--—உண்மையின் தன்மை; தேஷு--— அவற்றில்; வித்யதே--— இருக்கிறது.
BG 16.7: அஸுர குணம் கொண்டவர்கள் எந்தச் செயல்கள் சரியானது, எது முறையற்றது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. எனவே, அவர்களிடம் தூய்மையோ, நல்ல நடத்தையோ, உண்மையோ கூட இல்லை.
ப்1ரவ்ருத்1தி1ம் ச1 நிவ்ருத்1தி1ம் ந ஜனா ந விது3ராஸுரா: |
ந ஶௌச1ம் நாபி1 சா1சா1ரோ ந ஸத்1யம் தே1ஷு வித்3யதே1 ||7||
அஸுர குணம் கொண்டவர்கள் எந்தச் செயல்கள் சரியானது, எது முறையற்றது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. எனவே, அவர்களிடம் தூய்மையோ, நல்ல நடத்தையோ, உண்மையோ கூட இல்லை.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
த3ர்மம் என்பது ஒருவரின் தூய்மை மற்றும் அனைத்து உயிர்களின் பொது நலனுக்கும் உகந்த நடத்தை நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. அத3ர்மம் என்பது தடைசெய்யப்பட்ட செயல்களைக் கொண்டுள்ளது, அவை சீரழிவுக்கு வழிவகுக்கும் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அஸுர குணம் வேதத்தின் அறிவு மற்றும் ஞானத்தின் மீது நம்பிக்கை இல்லாதது. எனவே, அதன் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் எது சரி எது தவறு என்று குழப்பத்தில் உள்ளனர். இதற்கு ஒரு பொதுவான உதாரணம் மேற்கத்திய தத்துவத்தின் தற்போதைய போக்கு. மறுமலர்ச்சிக்குப் பிறகு, அறிவொளி, மனிதநேயம், அனுபவவாதம், கம்யூனிசம், இருத்தலியல் மற்றும் ஐயுறவுவாதம் போன்ற பல்வேறு சிந்தனைப் பள்ளிகளின் மூலம் உருவாகி, மேற்கத்திய தத்துவத்தின் தற்போதைய சகாப்தம் 'பின்நவீனத்துவம்' என்று முத்திரை குத்தப்படுகிறது. முழுமையான உண்மை இல்லை என்பதே பின்-நவீனத்துவ சிந்தனையின் பரவலான பார்வை. முழுமையான உண்மை போன்ற ஒரு விஷயம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை பலர் நிராகரித்துள்ளனர். 'அனைத்தும் தெராடர்புடையது ' என்பது பின்-நவீனத்துவ தத்துவத்தின் முழக்கமாக மாறியுள்ளது. 'அது உங்களுக்கு உண்மையாக இருக்கலாம், ஆனால் எனக்கு அது உண்மையல்ல' போன்ற சொற்றொடர்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். உண்மை என்பது ஒரு நபரின் தனிப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் நீடிக்க முடியாத தனிப்பட்ட விருப்பமாக அல்லது உணர்வாக பார்க்கப்படுகிறது. இந்த கண்ணோட்டம் சரியான மற்றும் தவறான நடத்தை பற்றிய கேள்வியைக் கையாளும் நெறிமுறைகள் விஷயத்தில் ஒரு பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது. முழுமையான உண்மை என்று எதுவும் இல்லை என்றால், எதற்கும் இறுதியான தார்மீக சரி அல்லது தவறு இல்லை. பிறகு, ‘இது உங்களுக்குச் சரியாக இருக்கலாம் ஆனால் அது எனக்குச் சரியானது என்று அர்த்தமில்லை’ என்று மக்கள் நியாயப்படுத்துகிறார்கள்.
அத்தகைய யோசனை பலரை மிகவும் ஈர்க்கிறது, ஆனால் அதன் தர்க்கரீதியான தீவிரத்திற்கு எடுத்துக் கொண்டால், அது அபத்தமானது மற்றும் பேரழிவு தருவதாக நிரூபிக்கிறது. உதாரணமாக, சிகப்பு நிறமாக இருந்தாலும், போக்குவரத்து விளக்குகளை ஒருவர் புறக்கணிப்பது சரியானது என்றால் என்ன செய்வது? அந்த நபர் தான் சரியென்று நம்புவதைச் செய்வதன் மூலம் மற்றவர்களின் உயிரைப் பணயம் வைத்துவிடுவார். எதிரிகளாகக் கருதும் மக்களுக்கு எதிராக அதிக மக்கள் தொகை கொண்ட மக்கள் வசிக்கும் பகுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குச் செல்வது சரியென்று யாராவது கருதினால் என்ன செய்வது? தான் செய்வது சரியானது என்று அவன் முழுமையாக நம்பியிருக்கலாம். ஆனால் சமூகம் மற்றும் மனித நேயத்தின் பார்வையில் அதை சரியான செயலாக கருத முடியுமா? அத்தகைய எண்ணமோ செயலோ இறுதி உண்மையாக இல்லாவிட்டாலும், ‘இதைச் செய்ய வேண்டும்' அல்லது 'இதைச் செய்யக்கூடாது' என்று யாரும் உண்மையில் சொல்ல முடியாது. ஒருவர் சொல்லக் கூடியது எல்லாம் 'இந்தச் செயலைப் பற்றி அதிக மக்கள் நல்லது என்று உணரவில்லை' மட்டுமே. சார்பியல்வாதக் கண்ணோட்டத்தின்படி, ஒருவர் பதிலளிக்கலாம், 'அது உங்களுக்கு உண்மையாக இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக எங்களுக்கு உண்மையல்ல.' ஒரு முழுமையான உண்மையின் நம்பிக்கையைப் புறக்கணிப்பதால் அழிவுகரமான நெறிமுறை விளைவுகள் இருக்கலாம்.
அஸுர குணம் கொண்டவர்கள் எது சரி, எது தவறு என்பதில் குழப்பமாக இருப்பதாகவும், அதனால் அவர்களிடம் தூய்மையோ, உண்மையோ, சரியான நடத்தையோ காணப்படவில்லை என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். பின்வரும் வசனத்தில், அத்தகைய மக்களின் மேலாதிக்கக் கருத்துக்களை விவரிக்கிறார்.